முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/செய்திப் பிரிவு

உலகம்

மாண்புமிகு ஆசிரியர் அவர்களுக்கும் எல்லா பத்திரிகைத்துறை ஆசிரியர்கள் அவர்களுக்கும் :
இந்தியா

மாண்புமிகு ஆசிரியர் அவர்களுக்கும் எல்லா பத்திரிகைத்துறை ஆசிரியர்கள் அவர்களுக்கும் :

அம்பேத்காரின் சமூக விளக்கு பத்திரிகை சார்பாக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*
ஆன்மிகம்

*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி!*
இந்தியா

*சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி!*

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.ஓய்வு முடிவு எனது உள்ளத்தை மிகவும் காயப்படுத்துகிறது; எனினும் இதுவே சரியான தருணம். காலப்போக்கில் சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரும்; அப்படி எனது இந்த அத்தியாயம் முடிவுக்கு வருகிறது – சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உருக்கம்.பலமுறை ஆழமாக சிந்தித்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். கால்பந்து வாய்ப்புகாக பல… Continue reading *சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி!*

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
இந்தியா

*நேபாளத்தில் 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்!*

நேபாளம்: வெள்ளத்தின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து துரிதமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவாடி, பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களின் உயிரையும் காப்பாற்றினார்.காலை 9.20 மணிக்கு வெள்ள எச்சரிக்கை கிடைத்ததும், பதற்றமின்றி பள்ளியின் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்து, மாணவர்களை 3 மாடி கட்டடத்தின் மேல்தளத்துக்கு அழைத்து செல்ல ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.பள்ளிக் கட்டடம் ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்ததால், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்தார்.துரித நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் உயிர் தப்பினர். எனினும், 2… Continue reading *நேபாளத்தில் 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்!*

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
இந்தியா

*காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை.*

விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீர் 17.604 டி.எம்.சி.யை உடனே திறக்க உத்தரவிட வேண்டும்.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் வெறும் 9,000 கனஅடியை 15 நாட்களுக்கு திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாராபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை.Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

அம்பேத்கரின் சமூக விளக்கு தமிழ் மாத பத்திரிகை இணையதளம் 28/08/2026 துவக்கம்…
இந்தியா

அம்பேத்கரின் சமூக விளக்கு தமிழ் மாத பத்திரிகை இணையதளம் 28/08/2026 துவக்கம்…

A S V பத்திரிகை இணையதளம் நமது நிறுவனர் ஆசிரியர் வெளியீட்டாளர் Mr Dr ஆ.ஆனந்தகுமார் அவர்கள் வெளியீடு அவருக்கு அம்பேத்கரின் சமூக விளக்கு பத்திரிகையின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்து பல்லாண்டு வாழ குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம எழுத்தாளர் ஆ.ஷாலினி

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
அரசியல் களம்

*நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.*

அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனம் நேபாளத்திற்குஆன்மிக சுற்றுலா சென்ற மேலும் 49 தமிழர்கள் மாயமாகி உள்ளனர்.நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. தகவல் தொடர்பு துண்டிப்பு – மாயமானோர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர்… Continue reading *நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.*

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
அரசியல் களம்

தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.

நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்-சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.Dr… Continue reading தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
அரசியல் களம்

*ஈஷா மூலம் யாத்திரை சென்ற 80 பேரின் நிலை தெரியவில்லை – ஜக்கி வாசுதேவ்.*

தன்னையும் சில தன்னார்வலர்களையும் கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டுமென நேபாள அரசுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம்.கியிரோங் வெள்ளத்தில் காணாமல்போன எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருக்க மாட்டோம்.எங்களின் ஒரே நோக்கம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதும், அவர்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல், தடயங்களைத் தேடுவதில் உதவுவதும்தான் – ஜக்கி வாசுதேவ் Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்