முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/செய்திப் பிரிவு

தமிழகம்

மாண்புமிகு ஆசிரியர் அவர்களுக்கும் எல்லா பத்திரிகைத்துறை ஆசிரியர்கள் அவர்களுக்கும் :
இந்தியா

மாண்புமிகு ஆசிரியர் அவர்களுக்கும் எல்லா பத்திரிகைத்துறை ஆசிரியர்கள் அவர்களுக்கும் :

அம்பேத்காரின் சமூக விளக்கு பத்திரிகை சார்பாக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.*
அரசியல் களம்

*ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.*

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையும் நிராகரிப்பு.இவிஎம் இயந்திரங்களை சோதனை செய்ததன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தலைமை நீதிபதி அமர்வு தெரிவிப்பு. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக.. சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம்*
அரசியல் களம்

*சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக.. சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம்*

தமிழை சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும்.ஐகோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்பட அம்சங்களுடன் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிகிறார். துணை ஆசிரியர் S.கண்ணன்

*மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.*
அரசியல் களம்

*மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.*

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் பாக்.கிலிருந்து AI மூலம் மோசடி -சிபிசிஐடி.*
அரசியல் களம்

*முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் பாக்.கிலிருந்து AI மூலம் மோசடி -சிபிசிஐடி.*

பொதுமக்களை ஏமாற்ற சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் AI மூலம் பணமோசடி-சிபிசிஐடி.முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் இந்தி மொழியில் பரவும் போலி வீடியோக்களை நீக்க துரித நடவடிக்கை.போலி வீடியோவில் பண உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு வாட்ஸ்அப் எண்ணை கொடுத்துள்ளார்கள்.போலி வீடியோக்களை பாகிஸ்தானை சேர்ந்த பேஸ்புக் ஐ.டி.களில் இருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகம்.குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சிபிசிஐடி.DEEP FAKE மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அறிக்கை.பொய்யான… Continue reading *முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் பாக்.கிலிருந்து AI மூலம் மோசடி -சிபிசிஐடி.*

*சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:*
அரசியல் களம்

*சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:*

*பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள் ரூபாய் 4,800 மதிப்பீட்டில்.*வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) அமைக்கப்படும்.ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000… Continue reading *சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:*

*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*
ஆன்மிகம்

*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*ரேஷன் கடைகளில் நாளை முதல் வெங்காயம்.*
அரசியல் களம்

*ரேஷன் கடைகளில் நாளை முதல் வெங்காயம்.*

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு. ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ வீதம் நாளை முதல் வெங்காயம் விற்கப்படவுள்ளது.

டாஸ்மாக் புகார் – எண்கள் அறிவிப்பு.
தமிழகம்

டாஸ்மாக் புகார் – எண்கள் அறிவிப்பு.

டாஸ்மாக் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800-889-2015 மற்றும் வாட்ஸ் அப் எண் – 7397720230 அறிவிப்பு.இனி எந்த சமரசமும் இன்றி டாஸ்மாக் நிர்வாகம் நேர்மையாக இயங்கும் என்றும் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டம். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
அரசியல் களம்

*காவிரியை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்.*

காவிரித் தாயை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.மேட்டூரில் காவிரி தாயை மனதார கைக்கூப்பி வணங்கி தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.காவிரியில் பெருக்கெடுத்த தண்ணீரில் பூக்களையும், நெல்மணிகளையும் வீசி நெகிழ்ச்சி.சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு நெல்விதைகளை வழங்கி நெகிழ்ச்சி.தண்ணீரை வரவேற்ற முதல்வருக்கு பச்சைத் துண்டை அணிவித்து மரியாதை செய்த விவசாயிகள். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.*
தமிழகம்

*தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.*

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 14,385க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது. துணை ஆசிரியர் ஆ.கல்பனா